Don't Miss!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜெய்ப்பூரில் இருந்தப்படியே எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகை ராதிகா.. விஜய் சேதுபதி!
சென்னை: மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு ஜெய்ப்பூரில் இருந்தப்படியே நடிகை ராதிகா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நடிகை ராதிகா கேளடி கண்மணி படத்தில் பாடகர் எஸ்பிபிக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் சாரதா டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்தார் ராதிகா.
இதனால் படப்பிடிப்பில் கூட தன்னை சாரதா டீச்சர் என்றே எஸ்பிபி அழைப்பார் என ஊடகங்களில் அவருடனான நினைவுகளை பகிர்ந்தார் ராதிகா.
இது ஒரு கனவா இருக்கக்கூடாதா? எஸ்பிபிக்காக கண்கலங்கிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்!
தனக்கு கிடைத்த பாக்கியம்
அதோடு அந்தப்படத்தில் தன்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்றும் கேட்டுக்கொண்டே இருந்தார் எஸ்பிபி என்றும், நல்லக் கதை அதனால் ஒப்புக்கொண்டேன் என்று தான் கூறியதாகவும் கூறினார் ராதிகா. எஸ்பிபி போன்ற இசை ஜாம்பவானுடன் இணைந்து நடித்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறினார் ராதிகா.
பார்க்க முடியவில்லை
மேலும் அவரது மறைவை தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்றும் உருக்கமாக கூறினார் ராதிகா. தற்போது ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரது முகத்தைக் கூட கடைசியாக பார்க்க முடியவில்லை என வேதனைப்பட்டார்.
மவுன அஞ்சலி
இந்நிலையில் ஜெய்ப்பூரில் இருந்தப்படியே படக்குழுவினருடன் சேர்ந்து எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார் ராதிகா. படப்பிடிப்பு தளத்தில் வைக்கப்பட்டிருந்த எஸ்பிபியின் பிரமாண்ட படத்திற்கு முன் விளக்கேற்றியும் படத்திற்கு மாலை அணிவித்தும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video
விஜய்சேதுபதி டாப்ஸி
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை டாப்ஸி உட்பட படக்குழுவினர் பலரும் பாடகர் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ராதிகா.