Don't Miss!
- News "மயக்கமா வருது" திடீரென பிரச்சாரத்தில் இருந்து கிளம்பிய அமைச்சர் நேரு! மருத்துவமனையில் அனுமதி! பரபர!
- Technology தூள் கிளப்ப போகும் நோக்கியா.. கம்மி பட்ஜெட்.. வருகிறது புதிய போன்கள்.. எந்தெந்த மாடல்?
- Lifestyle ஒரு மணி நேரத்திற்கு 7400 ரூபாய் சம்பாதிக்கும் பெண்... அப்படி என்ன செய்றாங்க இவங்க... இதுக்கே இவ்வளவு வருமானமா?
- Finance பெங்களூரை நேரம் பார்த்து அடிக்கும் கேரளா.. ஐடி நிறுவனங்களுக்கு வலைவீச்சு..!!
- Automobiles மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
ஜெய்ப்பூரில் இருந்தப்படியே எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகை ராதிகா.. விஜய் சேதுபதி!
சென்னை: மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு ஜெய்ப்பூரில் இருந்தப்படியே நடிகை ராதிகா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நடிகை ராதிகா கேளடி கண்மணி படத்தில் பாடகர் எஸ்பிபிக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் சாரதா டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்தார் ராதிகா.
இதனால் படப்பிடிப்பில் கூட தன்னை சாரதா டீச்சர் என்றே எஸ்பிபி அழைப்பார் என ஊடகங்களில் அவருடனான நினைவுகளை பகிர்ந்தார் ராதிகா.
இது ஒரு கனவா இருக்கக்கூடாதா? எஸ்பிபிக்காக கண்கலங்கிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்!
தனக்கு கிடைத்த பாக்கியம்
அதோடு அந்தப்படத்தில் தன்னுடன் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்றும் கேட்டுக்கொண்டே இருந்தார் எஸ்பிபி என்றும், நல்லக் கதை அதனால் ஒப்புக்கொண்டேன் என்று தான் கூறியதாகவும் கூறினார் ராதிகா. எஸ்பிபி போன்ற இசை ஜாம்பவானுடன் இணைந்து நடித்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறினார் ராதிகா.
பார்க்க முடியவில்லை
மேலும் அவரது மறைவை தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்றும் உருக்கமாக கூறினார் ராதிகா. தற்போது ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரது முகத்தைக் கூட கடைசியாக பார்க்க முடியவில்லை என வேதனைப்பட்டார்.
மவுன அஞ்சலி
இந்நிலையில் ஜெய்ப்பூரில் இருந்தப்படியே படக்குழுவினருடன் சேர்ந்து எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார் ராதிகா. படப்பிடிப்பு தளத்தில் வைக்கப்பட்டிருந்த எஸ்பிபியின் பிரமாண்ட படத்திற்கு முன் விளக்கேற்றியும் படத்திற்கு மாலை அணிவித்தும் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video
விஜய்சேதுபதி டாப்ஸி
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை டாப்ஸி உட்பட படக்குழுவினர் பலரும் பாடகர் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ராதிகா.