Don't Miss!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்னை விமர்சிப்பதால் சிலருக்கு மகிழ்ச்சி..ரசிகர்களுடன் உரையாடிய போது கதறியழுத பிரபல நடிகை.. பரபரப்பு
சென்னை: ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது பிரபல நடிகை கதறியழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக பிரபல கன்னட நடிகையான ராகினி திவேதி கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட 5 மாதங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அண்மையில் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ரசிகர்களுடன் உரையாடல்
இந்நிலையில் சிறைவாசத்துக்கு பிறகு முதல் முறையாக இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களை சந்தித்தார் ராகினி திவேதி. இந்த வீடியோ 19.43 நிமிடம் உள்ளது. இதில் பேசியுள்ள ராகினி, நான் உங்களை சிரிக்க வைக்கவும் சந்தோஷப்படுத்தவும் தான் வந்துள்ளேன்.
வேதனைக்குள்ளானது
என் சமையல் வீடியோக்களையும் சில ஃபன் வீடியோக்களையும் வெளியிடுவேன். அந்த வீடியோவை பார்க்கும் போதே அவர் சிறை தண்டனையால் மிகவும் வேதனைக்குள்ளானது தெளிவாக தெரிகிறது.
சோதனைகளை கொடுக்கும்
சில நேரங்களில் காலம் நமக்கு சோதனைகளை கொடுக்கும். என் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். நிறைய பேருக்கு என்னால் முயன்ற உதவிகளை செய்து உள்ளேன்.
கஷ்டத்தை அனுபவிக்கவில்லை
ஆனால் கடந்த சில மாதங்களாக அனுபவித்தது போல என் வாழ்க்கையில் நான் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை. அந்த கடினமான காலகட்டத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு சப்போர்ட்டாக இருந்தனர்.
என்ன சந்தோஷம்?
நான் சிறைக்கு சென்றதும் என்னை பற்றி நிறைய பேர் அவதூறாக விமர்சித்தனர். என்னைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் விமர்சிக்கும் போது அது என்ன மாதிரியான சந்தோஷத்தை அவர்களுக்கு கொடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நான் அதை என் கன்னத்தில் எடுத்துக்கொண்டு முன்னேறுகிறேன்.
சீப்பான கமெண்ட்ஸ்
என்னைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் மோசமாக கமெண்ட் பதிவிட்டவர்கள் நிச்சயமாக அவர்களின் கமெண்ட்டுகளை திரும்பவும் படித்து பார்க்க வேண்டும். அவர்கள் குடும்பத்தை பற்றி இப்படி சீப்பான கமெண்டுகளை போட்டால் என்ன செய்வார்கள்.
கதறிய ராகினி திவேதி
விமர்சிக்கும் போது சிலருக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. இதுவும் எனக்கு மகிழ்ச்சி தான் என்று கண்ணீர் விட்டு அழுதார். பல இடங்களில் தனது சிறை தண்டனை குறித்து பேசும் போது கதறினார் ராகினி திவேதி.
பேசவே முடியாமல்..
அதைப்பற்றி யோசித்தாலே என்னால் தூங்க முடியவில்லை. நான் திடமாக இருக்க வேண்டும், என் மீதான நம்பிக்கையை நான் இழக்கக்கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் என்று கண்ணீர்விட்டார். பேசவே முடியாமல் திணறினார் ராகினி திவேதி.