இன்னும் கல்யாணமே ஆகல.. அதற்குள் மகனா.. பிக்பாஸ் நடிகையின் பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் நடிகை ஷேர் செய்த இன்ஸ்டா பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மாடல் அழகி ரைஸா வில்சன். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள ரைஸா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.
தற்போது விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தில் நடித்து வருகிறார் ரைஸா வில்சன். மேலும் ஹேஷ்டேக் லவ், காதலிக்க யாருமில்லை, அலைஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தொப்புள் தெரிய
தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதால் தனது செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். அவ்வபோது போட்டோ ஷுட்டுக்களும் நடத்தி வருகிறார் ரைஸா வில்சன். அண்மையில் நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற டி ஷர்ட்டில் தொப்புள் தெரிய கிளாமராக போஸ் கொடுத்திருந்தார்.

மடியில் அமர்ந்து
இதனை பார்த்த நெட்டிசன்கள், செம க்யூட், செம ஹாட் என வர்ணித்தனர். இதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் படம் ரிலீஸ் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் ஹரீஷ் கல்யாண் மடியில் அமர்ந்து பியானோ வாசிப்பது போன்ற இமேஜை ஷேர் செய்திருந்தார்.

என் மகன்
இந்நிலையில் தனது செல்லப் பிராணிகளில் ஒன்றான கறுப்பு பூனையுடன் போஸ் கொடுத்துள்ளார். தனியாக ஒரு மரத்துக்கு அடியில் மடியில் பூனைக்குட்டியுடன் அமர்ந்துள்ள ரைஸா வில்சன், அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு என்னுடனும் என் மகனுடனும் யாரும் பேசாதீர்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஷாக்காயிட்டேன்
இதனை பார்த்த நெட்டிசன்கள் கல்யாணமே ஆகல.. அதற்குள் மகனா.. ஷாக்காயிட்டேன் போங்க என கிண்டலாக கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் அம்மாவும் பிள்ளையும் அழகாக
இருக்கிறீர்கள் என கூறியுள்ளனர்.

நெட்டிசன்ஸ் அக்கறை
ரைஸா வில்சன் கறுப்பு நிற உடை அணிந்திருப்பதால் அவர் தனது கையில் கறுப்பு நிற பூனைக்குட்டியை வைத்திருப்பதே தெரியவில்லை. இதனையும் குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் இப்போது எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள் என அக்கறையுடனும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











