நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு!
நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடைபெறவுள்ளது.
நடிகை ரம்பா, சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி. நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்கள் ஹிட்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

ரம்பா
ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் லாவண்யா என்ற மகளும் 3 வயதில் சாஷா என்ற மகளும் உள்ளனர்.

விவாகரத்து
ரம்பாவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக்கு தயாரானார்கள். இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மகிழ்ச்சி
ஆனால் குடும்பத்தினர் சமரசம் பேசி மீண்டும் சேர்த்து வைத்தனர். இந்நிலையில் தற்போது அதில் இருந்தெல்லாம் மீண்டு கணவருடன் கனடாவில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்.

வளைகாப்பு
இந்த நிலையில் ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இப்போது அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடைபெற்றுள்ளது.
போட்டோக்கள்
கணவர் இந்திரகுமார் பத்மநாதனே அவருக்கு சீமந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











