Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு!
நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடைபெறவுள்ளது.
நடிகை ரம்பா, சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி. நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்கள் ஹிட்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
ரம்பா
ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் லாவண்யா என்ற மகளும் 3 வயதில் சாஷா என்ற மகளும் உள்ளனர்.
விவாகரத்து
ரம்பாவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக்கு தயாரானார்கள். இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மகிழ்ச்சி
ஆனால் குடும்பத்தினர் சமரசம் பேசி மீண்டும் சேர்த்து வைத்தனர். இந்நிலையில் தற்போது அதில் இருந்தெல்லாம் மீண்டு கணவருடன் கனடாவில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்.
வளைகாப்பு
இந்த நிலையில் ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இப்போது அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடைபெற்றுள்ளது.
|
போட்டோக்கள்
கணவர் இந்திரகுமார் பத்மநாதனே அவருக்கு சீமந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.