Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடிகை ரம்பா கார் விபத்தில் சிக்கினார்..குழந்தை மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை : நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளானதில் அவருடைய இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. உழவன் படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ரம்பாவிற்கு சுந்தர் சியின் உள்ளத்தை அள்ளித்தா படம் சிறப்பாக கைக்கொடுத்தது.
இந்த படத்தில் உடையை காற்றில் பறக்கவிட்டு, தொடையழகை காட்டி அழகிய லைலா பாடலுக்கு டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பினார்.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடக ரத்னா' விருது.. ரஜினிகாந்த் இன்று வழங்குகிறார்
நடிகை ரம்பா
உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்துடன் அருணாச்சலம்,கமலுடன் காதலா காதலா, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், விஜய்காந்த், அர்ஜுன், அஜித், பிரபுதேவா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
காதல் திருமணம்
படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ரம்பா, 2010ம் ஆண்டில் காதல் திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்பா, அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மீனாவின் கணவர் உயிரிழந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்து மீனாவுக்கு ஆறுதல் கூறியிருந்தார்.
கார் விபத்துக்குள்ளானது
இந்நிலையில், நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,கார் விபத்துக்குள்ளான வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எனது கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தைகளுடன் நான் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.நானும் என் ஆயாவும் சிறு காயங்களுடன் சிகிச்சை முடிந்து மீண்டுவிட்டோம். ஆனால், என் குட்டி மகள் சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
பதறிப்போன ரசிகர்கள்
ரம்பாவின் இந்த பதிவினைப் பார்த்து பதறிப்போன ரசிகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். மேலும், குழந்தைக்கு ஒன்றும் ஆகாது பயப்படாமல் இருங்கள் என்று பலரும் ரம்பாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளான செய்தி காட்டுத்தீ போல இணையத்தில் வேகமாக பரவி வருகிறது