Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வைர நகைகள் திருட்டு... வேலைக்காரப் பெண் கைது
இந்த வேலைக்காரப் பெண் கடந்த 7 வருடமாக ரம்யா கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வந்தவராம்.
ரம்யா கிருஷ்ணனின் வீடு சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. அங்கு தனது பெற்றோர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இவரது வீட்டில் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் வீட்டில் இருந்த நகைப் பெட்டியை ரம்யா கிருஷ்ணன் திறந்து பார்த்தபோது அதில் இருந்த வைர நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 50 பவுன் நகைகளைக் காணவில்லை என்று தெரிய வந்ததாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா கிருஷ்ணன், தனது தாயாருடன் நீலாங்கரை காவல் நிலையம் சென்று அங்கு புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வேலைக்காரப் பெண் ஜோதியைக் கைது செய்தனர். அவர்தான் நகைகளைத் திருடியதாக தெரிய வந்துள்ளதாம். அவரிடமிருந்து நகைகளை மீட்கும் நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டுள்ளனராம்.