Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'அந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தலாம்..? பிரபல நடிகை ஆவேசம்.. நடிகர் மீது வழக்குத் தொடர முடிவு
சென்னை: தன்னைப் பற்றி தவறாக பேசியதாக நடிகர் மீது, பிரபல முன்னாள் ஹீரோயின் வழக்குத் தொடர இருக்கிறார்.
பிரபல முன்னாள் ஹீரோயின் ரஞ்சனி. பாரதிராஜா இயக்கிய முதல்மரியாதை படத்தில் அறிமுகமானவர் நடிகர்.
தொடர்ந்து கடலோர கவிதைகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், மண்ணுக்குள் வைரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
90ஸ் குயின்.. திரிஷா பிறந்த நாள்.. விதவிதமான ஹேஷ்டேக்ஸால் தெறிக்கும் டிவிட்டர்! #HBDSouthQueenTrisha
ஆயுட்கால உறுப்பினர்
மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ள இவர், டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். சிங்கப்பூரைச் சேர்ந்த ரஞ்சனி, திருமணத்துக்குப் பிறகு கேரளாவில் செட்டிலாகிவிட்டார். வழக்கறிஞரான இவர், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இவர் ஆயுட்கால உறுப்பினராக இருக்கிறார்.
வாட்சப் குரூப்
ஆயுட்கால உறுப்பினர்களுக்கு நடிகர் சங்கம், தனியாக வாட்சப் குரூப் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகர், நடிகைகள், தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் நாசர், கார்த்தி, மனோபாலா உட்பட பலர் இந்த குரூப்பில் உள்ளனர். கொரோனா நிவாரண நிதி குறித்து இந்த குரூப்பில் சில விவாதங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
நாடக நடிகர்
அப்போது, திருவண்ணாமலையை சேர்ந்த நாடக நடிகரான வாசுதேவன் பற்றி, நடிகை ரஞ்சனி இவர் நடிகரா? என்று கேட்டுள்ளார். இதையடுத்து அதற்குப் பதிலளித்த வாசுதேவன், 'நான் நடிகர்தான், ஆனால், உங்கள் தொழில் வேற' என்று கூறினாராம். அந்த 'தொழில்' என்ற வார்த்தை ரஞ்சனியை காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அந்த அர்த்தம்
இதையடுத்து எப்படி இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் என்று அவர் ஆவேசப்பட்டார். நடிகை ரஞ்சனிக்கு ஆதரவாக சில நடிகர்கள் பேசினர். இதற்கு விளக்கம் அளித்த வாசுதேவன், 'நீங்கள் சினிமா நடிகர், நான் நாடக நடிகர். இரண்டு பேர் தொழிலும் வேறு' என்ற அர்த்தத்திலேயே அப்படிக் குறிப்பிட்டேன் என்றார்.
மன்னிப்புக் கேட்கணும்
இதை ஏற்காத நடிகை ரஞ்சனி, தன்னை தவறாகப் பேசியதாகக் கூறி இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கேட்டார். குரூப் அட்மினான நடிகர் நாசர், கார்த்தி உள்ளிட்டோரும் இதற்கு பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை ரஞ்சனி, வாசுதேவன் மீது வழக்குப் பதிவு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.