நாகினி 4 தொடரில் அந்த நடிகையை மாத்திட்டீங்களாம்யா... அவருக்குப் பதிலாக வந்த பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: சூப்பர் ஹிட்டான நாகினி தொடரின், நான்காம் பாகத்தில், பிரபல பிக்பாஸ் நடிகை இணைந்துள்ளார்.
Recommended Video
இந்தியில் சூப்பர் ஹிட்டானத் தொடர் நாகினி. இதன் முதல் தொடரில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
தமிழ் தெலுங்கு மொழிகளிலும் இந்தப் தொடர் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதன் முதல் பாகம், சன் டிவியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

பாம்பு உருவம்
பாம்பு கதை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்துப் போக இவர்களும் தொடர்ந்து இந்த சீரியலைப் பார்த்து வருகின்றனர். இச்சாதாரி பாம்புகள் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தவர்களுக்கு, அவ்வப்போது மனித உருவமும், பாம்பு உருவமுமாக மாறி மாறி இருக்கும் என்று புதிய அர்த்தத்தை இந்த தொடர் மூலம் சொன்னார்கள்.

நான்காம் பாகம்
அதோடு, நாகமணி விலை மதிப்பற்றது, அதை மனிதர்கள் எடுத்து வைத்துக்கொண்டு, இச்சாதாரி பாம்புகளை அலைய விடுவது என்பது போல கதை அமைக்கப்பட்டு இருந்தது. இரண்டாம் பாகம், கலர்ஸ் டிவியில் டப் செய்யப்பட்டு வெளியானது. நாகினி 3 ஆம் பாகமும் ஒளிபரப்பான நிலையில், இப்போது நான்காம் பாகம் வெளியாகி வருகிறது. இதில் நடிக்கும் நடிகைகளும் பிரபலமாகி விடுகின்றனர்.
View this post on InstagramWhat’s #rashmidesai doing for holi?? #naagin #comingsoon
A post shared by Mukta Dhond (@muktadhond) on
பிக்பாஸ் 13
நான்காவது பாகத்தில் நியா ஷர்மா, விஜயேந்திர குமேரியா, அனிதா ஹசனந்தனி ஆகியோர் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தி பிக்பாஸ் 13 வது தொடர் மூலம் பிரபலமான ரஸாமி தேசாய், இந்த தொடரில் இணைந்துள்ளார். அவர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நயன்தாரா
இதை நாகினி 4 தொடரின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் முக்தா தோண்ட் உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஸாமி தேசாய் நடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ரஸாமி, அதில் நடித்த ஜாஸ்மின் பாசினுக்குப் பதிலாக இடம்பெறுகிறார் என்று தெரிய வந்துள்ளது.

பாலியல் ரீதியாக
ரஸாமி தேசாய் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை அனுபவத்தை கடந்த சில நாட்களுக்கு முன் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். 'படுகைக்கு சென்றால் மட்டுமே சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும், இல்லை என்றால் சும்மா இருக்க வேண்டியதுதான் என்று என்னை பாலியல் ரீதியாக, எனது முதல் காஸ்டிங் இயக்குனர் சுரண்ட முயன்றார்' என்று தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











