சிக்குன்னு சிகப்பு நிற ஆடையில் இளசுகளை சிக்கவைக்கும் ரெஜினா கெஸன்ட்ரா!
சென்னை : செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பேயாக வந்து அனைவரையும் மிரட்டி இருந்தார் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா.
தற்பொழுது பார்ட்டி, சூர்ப்பநகை, கசடதபற என தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சிரஞ்சீவியின் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் ஆச்சார்யா படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்து வரும் ரெஜினா இப்போது சிக்குன்னு சிகப்பு நிற ஆடையில் இளசுகளை சிக்கவைக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து அனைவருக்கும் பரிச்சயமான நடிகை ரெஜினா கெஸன்ட்ரா இப்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

ஆச்சார்யா
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்து வரும் இவருக்கு அங்கு பெரிய மார்க்கெட் இருக்க முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வரும் இவர் இப்பொழுது சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார்.

பேயாக நடித்து
தொடர்ந்து காதல் படங்களை அழுத்தம் திருத்தமாக சொல்லிவந்த செல்வராகவன் முதல்முறையாக ஹாரர் கதையை இயக்கி இருக்க அதில் பேயாக நடித்து பட்டையை கிளப்பி இருந்த ரெஜினா கெஸன்ட்ரா அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அளவில்லாத கவர்ச்சியை காட்டி நடித்துள்ள பார்ட்டி மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

நாயை தடவிக் கொடுக்கும்
தமிழ் சினிமாவில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவர் அருண் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் பெயரிடாத படத்தை குற்றம் 23 புகழ் அறிவழகன் இயக்கி வர இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சிக்குன்னு சிகப்பு நிற உடையில் இளசுகளை பக்குன்னு சிக்க வைக்கும் அழகில் சோபாவில் உட்கார்ந்துகொண்டு செல்ல நாயை தடவிக் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











