Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகை ரேகா மோகன் தற்கொலையா, இல்லை...: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை
திருச்சூர்: நடிகை ரேகா மோகன் விஷம் குடித்து தற்கொலை செய்யவில்லை. மாறாக மாரடைப்பால் மரணம் அடைந்தது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர் ரேகா மோகன்(45). கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஷோபா சிட்டி அபார்ட்மென்ட்டில் தனியாக வசித்து வந்தார்.
அவரது கணவர் மோகன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
மரணம்
புற்றுநோயால் சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த ரேகாவுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த வாரம் அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விஷம்
ரேகா டைனிங் டேபிளில் சாய்ந்தபடி இறந்து கிடந்தார். அவர் அருகே ஒரு கிளாஸில் குளிர்பானம் இருந்தது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கக்கூடும் என செய்திகள் வெளியாகின.
மாரடைப்பு
ரேகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது என மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டிவி தொடர்கள்
பெரிய திரையில் இருந்து சின்ன திரைக்கு வந்தும் கேரள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தவர் ரேகா. அதிலும் குறிப்பாக மாயம்மா சீரியல் அவருக்கு பெயரும், புகழும் பெற்றுத் தந்தது.