Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகாவின் முதல் பதிவு.. ரெண்டு செல்லக்குட்டீஸ்க்கு உம்மா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நடிகை ரேகாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நடிகை ரேகா இரண்டாம் வாரமான நேற்று வெளியேறினார்.
முதல் வாரம் எவிக்ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாய் வெளியேறினார்.
பயில்வான் லேசுப்பட்ட ஆளு இல்லப்பா.. ஆத்தாவையே தண்ணி பார்ட்டின்னு சொல்லி.. டகால்டி விட்டவரு!
மகள் ஃபீல்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேகாவை ஹவுஸ்மேட்டுகள் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தனர். பிக்பாஸ் வீட்டில் ஷிவானியிடம் தனக்கு தன்னுடைய மகள் ஃபீல் இருந்ததாக கூறி கண்ணீர்விட்டார் ரேகா.
கதறி அழுத ஷிவானி
இதேபோல் பாலாஜி முருகதாஸிடமும் நெருக்கமாக இருந்த ரேகா இருவரையும் மிஸ் பண்ணுவதாக கூறினார். ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதை தாங்கமுடியாமல் ஷிவானி கண்ணீர் விட்டு கதறி அழுததும் பாலாஜி சோகமே உருவாக இருந்ததும் சக போட்டியாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஷிவானிக்கு காய்ன்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போது, வீட்டிற்குள் செல்லும் போது கொண்டு சென்ற செடியை ரியோவிடம் கொடுத்தார் ரேகா. அதனை தொடர்ந்து தனது உண்டியலை உடைத்த ரேகா அதில் இருந்த காய்னை ஷிவானியிடம் கொடுத்தார்.
ரேகா பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறும் எபிசோட் ஒளிப்பரப்பாகும் முன்பே தான் எலிமினேட் ஆகிவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோவை ஷேர் செய்து அறிவித்திருந்தார் ரேகா. இந்நிலையில் நடிகை ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.
செல்லக்குட்டிஸ்..
அதில் ஷிவானி மற்றும் பாலாஜியின் போட்டோக்களை ஷேர் செய்து நொறுங்கிப் போன இதயங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் உங்கள் இருவரையும் நேசிக்கிறேன், மோசமாக மிஸ் பண்றேன் செல்லக்குட்டிஸ்.. உம்மா என கேப்ஷன் கொடுத்துள்ளார்.