Don't Miss!
- News லோக்சபா தேர்தல் 2024: பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் இவர்கள்தான்- முழு பட்டியல்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நான் சாகவில்லை.. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்.. வெகுண்டெழுந்த நடிகை ரேகா.. என்ன ஆச்சு?
சென்னை: மூத்த நடிகை ரேகா தன்னை பற்றி வெளியாகி வரும் வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.
ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரேகா. கடலோர கவிதைகள், புன்னகை மன்னன் படம் மூலம் கோலிவுட்டில் இவர் முக்கிய நடிகையாக உருவெடுத்தார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஊட்டியில்தான் வளர்ந்தார். அதேபோல் இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
என்ன மொழி
சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து இருந்த இவர் மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிக்கும் 100% காதல் படத்தில் நடிகை ரேகா நடித்து உள்ளார். இதன் மூலம் தமிழில் மீண்டும் அதிக படங்களை நடிக்க ரேகா முடிவு செய்துள்ளார்.
என்ன மரணம்
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரேகா சில முக்கிய விஷயங்களை குறிப்பிட்டார். அதில், நான் இங்கு இருப்பவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். நான் இறந்துவிட்டதாக சில யூ டியூப் சேனல்களில் செய்திகள் வருகிறது. என்னை வைத்து வதந்தி பரப்புகிறார்கள். அடிக்கடி நிறைய வீடியோ வெளியாகிறது.
என்ன பேசினார்
நான் இறந்து எனக்கு பெரிய நடிகர் அஞ்சலி செலுத்துவது போல சித்தரித்துள்ளனர். இதனால் பலர் எனக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள். எனக்கு எதுவும் ஆகவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். யார் யாரோ யூ டியூப் சேனல் தொடங்கி இப்படி என்னை பற்றி பேசுகிறார்கள். அவர்களின் வருமானத்திற்காக இப்படி தவறாக செய்கிறார்கள்.
பொறுப்பு இல்லை
கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் அவர் இப்படி செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னிடம் சிலர் போன் செய்து செத்து போய்ட்டியா நீ என்று கேட்டார்கள். அவர்களிடம் சிரித்துக் கொண்டே, ஆம், செத்துட்டேன்.. இப்போ பேய் தான் பேசுகிறேன் என்று கிண்டலாக குறிப்பிட்டேன்.
இப்படியா
நான் பாட்டுக்கு அமைதியாக இருக்கிறேன். என்னை ஏன் தொந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் போயிட்டா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்' என்று விஜய் சார் சொன்னதை கேட்டு, அதை போலவே அமைதியாக இருக்கிறேன்.
ஏன் இப்படி எல்லாம்
என்னை பற்றி ஏன் தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. என் உறவினர்கள் இதனால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று தெரியுமா? இதன் மூலம் சம்பாதிக்கும் பணம் எல்லாம் எதற்கு? இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். என்று ரேகா குறிப்பிட்டுள்ளார்.