சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்! ரோகினிக்கும் ராதிகாவுக்கும் என்ன ரோல் தெரியுமா?
சென்னை: சரண் இயக்கத்தில் உருவாகும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிகைகள் ராதிகா மற்றும் ரோகினியின் கதாப்பாத்திரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகும் படம் மார்க்கெட்ராஜா எம்பிபிஎஸ். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் ஹீரோவாக நடிக்கிறார்.

அவரை தவிர நடிகைகள் ரோகினியும் ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அதாவது ரோகினி லதாம்மா என்ற கதாப்பாத்திரத்தில் வாய் பேச முடியாத காது கேளாதா தாயாக நடிக்கிறாராம்.
அதேபோல் நடிகை ராதிகா சரத்குமார் பெண் தாதாவாக நடிக்கிறாராம். அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் பட்டாளம் சுந்தரிபாய் என தெரியவந்துள்ளது.
படத்தின் கதையை கேட்ட சில நிமிடங்களிலேயே ரோகினி லதாம்மா கதாப்பாத்திரமாகவே மாறிவிட்டாராம். கதைக் கேட்கும் போதே சைகை மொழியில் பேசி அசத்திவிட்டாராம் நடிகை ரோகினி.
படப்பிடிப்பின் போதும் கூட கதாப்பாத்திரமாகவே இருந்தாராம் ரோகினி. நடிகை ரோகினி பல சமூக நலன் சார்ந்த செயல்களில் துடிப்போடு செயல்பட்டு வருகிறார். விரைவில் அவரை புதிய தோற்றத்தில் திரையில் பார்க்கலாம் என்கிறது படக்குழு.


Click it and Unblock the Notifications











