Don't Miss!
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கேரள வெள்ளம்.. நடிகை ரோகினி நிதியுதவி.. 'அம்மா' வுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகை ரோகினி 2 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகை ரோகினி 2 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
ஆங்காங்கே ஏற்பட்ட மண்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
49 பேர் பலி
கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் நிதியுதவி
லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் சின்னாபின்னமாகியுள்ள கேரளாவுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம்
வெள்ள பாதிப்புக்களில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக கோலிவுட்டில் இருந்து நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சமும், நடிகர் கமல்ஹாசன் ரூ.25 லட்சமும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரூ.5 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளன.
|
ரோகினி நிதியுதவி
இந்நிலையில் நடிகை ரோகினி, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். நிதியுதவி அளித்த ரோகினிக்கு கேரள அரசு நன்றி தெரிவித்துள்ளது.
வெறும் 10 லட்சம்
கேரள நடிகர்கள் சங்கம் வெறும் 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கேரள நடிகர் சங்கமான அம்மா வழங்கியது குறிப்பிடத்தக்கது.