Don't Miss!
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கள்ளச் சாராய கடைகளை அடித்து நொறுக்கிய நடிகை ரோஜா!
நகரி:
ஆந்திராவில் கள்ளச் சாராயக் கடைகளை பெண்களுடன் சென்று அடித்து நொறுக்கினார் நடிகை ரோஜா.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவியாக உள்ள ரோஜா மிக ஆர்வமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் ரோஜா. அப்போது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மிகச் சாதாரணமாக கள்ளச் சாராய கடைகள் இருப்பதைப் பார்த்தார்.
அதிர்ச்சியடைந்த ரோஜா ஒரு பகுதியில் பெண்களை திரட்டிக் கொண்டு கள்ளச் சாராய கடைக்குள் புகுந்து அடித்து நொறுக்கினார். ரோஜா மற்றும் பெண்களின் ஆவேசத்தைப் பார்த்த சாராய வியாபாரிகளும் குடிமகன்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.
ஒரு கடையில் ஆரம்பித்து அடுத்தடுத்து அந்தப் பகுதியில் இருந்த 5க்கும் மேற்பட்ட கடைகளில் நுழைந்து அடித்து நொறுக்கி விட்டாராம் ரோஜா.
இது குறித்து ரோஜா கூறிகையில்,
ஆந்திராவில் கணக்கில் அடங்காத கள்ளச் சாராய கடைகள் உள்ளன. ஆனால், காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் நானே நேரடியாக நடவடிக்கையில் இறங்கி விட்டேன். இந்த அதிரடி நடவடிக்கை மாநிலம் முழுவதும் தொடரும் என்றார்.