Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
என் சமையல் அறையில்.. ஜாலியாக சமைத்து அசத்தும் ரோஜா !
சென்னை : நடிகை ரோஜா ஊரடங்கு உத்தராவால் தன் வீட்டில் தானே சமைக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை ரோஜா என்று யாரும் அழைப்பது கிடையாது ஏனெனில் ரோஜா கடந்த 6 வருடமாக அரசு பணியாற்றி வருகிறார் எம்.எல்.ஏ ரோஜா வாக மக்கள் பணியில் இருக்கிறார். ஆந்திரபிரதேசத்தின் சட்டசபையில் ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொருப்பில் இருக்கிறார். இவர் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
அம்மா, அப்பாவ சாகடிக்க ஊருக்கு போகாதீங்க.. பாதுகாப்பா வீட்லயே இருங்க.. ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் அரசு பணியாட்களுக்கு சிறு அளவிலான விடுமுறை கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் எம்.எல்.ஏ ரோஜா தன் வீட்டில் தானே சமைத்து அதை தன் மகனுக்கு ஊட்டிவிட்டு சுவை பார்க்க சொல்கிறார். இறுதியாக சமைத்த பின் மஸ்ரூம் கறி ரெடி என மகிழ்ச்சியாக கேமார முன் கூறிவிட்டு செல்கிறார்.. தற்போது இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
ரோஜா போல பல நடிகர்களும் தங்களின் இல்லங்களில் தாங்கள் பொழுதுபோக்க என்னவெல்லாம் செய்து வருகிறோம் என்று காணொலிகள் மூலம் பகிர்ந்து வருகின்றனர் .
நடிகர் பரத் தன் குழந்தைகளுடன் விளையாடி விடுமுறையை கழித்து வருகிறார். தன் குழந்தையை தூக்கி உடற்பயிற்சி செய்தும் அவர்களுக்கும் உடற்பயிற்சிகளை கற்று தர முயன்றும் வருகிறார் .
மேலும் நடிகர் விஷ்ணு விஷால் தன் உடலை கட்டு கோப்பாக வைக்க முயன்று வருகிறார். தன் வீட்டு மாடியிலே அனைத்து உடற்பயிற்சி பொருட்களையும் வைத்து உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார்
உலகம் முழுவதும் 19000 அதிகமான உயிரை கொரோனா பறித்துள்ள நிலையில் உலகத்தின் அனைத்து நாடுகளும் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி வருகின்றன. இந்த நேரத்தில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க உள்ள நிலையில் தற்போது இதை சமாளிக்க பல பிரபலங்களும் தங்களால் முடிந்த ஃபாசிடிவ்வான விஷயங்களை செய்து வருகின்றனர் மேலும் அதை பகிர்ந்தும் வருகின்றனர்.