Don't Miss!
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை சபர்ணாவின் அறையில் மது, சிகரெட் தடயம்: பலாத்காரம் செய்து கொலையா?
சென்னை: நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சபர்ணா சென்னையில் தனது வீட்டில் நிர்வாணமாக அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சபர்ணா நிர்வாணமாக கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சபர்ணா
சபர்ணாவின் வீடு பூட்டாமல் சும்மா மூடியிருந்திருக்கிறது. படுக்கையறையில் சபர்ணா நிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அருகில் அவரது ஆடை மற்றும் சிறு கத்தி இருந்துள்ளது.
சிகரெட்
சபர்ணாவின் அறையில் டீக்கப்புகள், பல வகை சிகரெட் துண்டுகள் இருந்துள்ளன. மேலும் போதைப் பொருள் உட்கொண்டதற்கான தடயங்களும் இருந்துள்ளன. சபர்ணாவுக்கு போதைப் பொருள் பழக்கம் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மது வாங்கி குடித்ததற்கான தடயங்களும் உள்ளது.
டைரி
சப்ரணாவின் வீட்டில் இருந்து போலீசார் டைரி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் எழுதப்பட்டுள்ள விபரங்கள் மூலம் சில முக்கிய துப்பு கிடைத்துள்ளதாம்.
காதல்
தமிழில் வாய்ப்பு இல்லாததால் இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி டெல்லி சென்ற இடத்தில் சபர்ணாவுக்கும் சினிமா பிரமுகர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அந்த காதல் தோல்வியில் முடிந்துள்ளது.
ஆண் நண்பர்
சபர்ணாவுக்கு சென்னையில் நெருங்கிய ஆண் நண்பர் ஒருவரும் உள்ளாராம். அவருடன் சபர்ணா அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். கடைசியாக கூட அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.