Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
புலியை காப்பாற்ற டிவிட்டர் கணக்கு தொடங்கிய நடிகை சதா...!
நடிகை சதா டிவிட்டர் கணக்கு தொடங்கி உள்ளார்.
சென்னை: பெண் புலியை காப்பாற்றும் நோக்கத்தில் நடிகை சதா டிவிட்டர் கணக்கு தொடங்கியுள்ளார்.
மஹாராஷ்ட்டிரா மாநிலம் யவத்மல் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா வனப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன், பெண் புலி ஒன்று இரண்டு மாதங்களாக உலவிக்கொண்டிருக்கிறது. அவ்னி என பெயரிடப்பட்டுள்ள இப்புலி மனிதர்களை வேட்டையாடி வருகிறது.
பெண் புலி அவ்னி இதுவரை 13 பேரை கொன்றிருக்கிறது. இதனால் மஹாராஷ்டிரா மாநில வனத்துறை, அவ்னியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது.
அவ்னிக்கு ஆதரவாக பிரச்சாரம்
இதையடுத்து பெண் புலி அவ்னிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் தன்னையும் இணைத்துக்கொள்ளும் விதமாக நடிகை சதா டிவிட்டர் கணக்கு தொடங்கியுள்ளார்.
நடிகை சதா டிவிட்டர் கணக்கு
அதில், "அவ்னிக்காக இந்த டிவிட்டர் கணக்கை தொடங்கி இருக்கிறேன். நமது தேசத்தின் பெருமைக்குரிய விஷயமான புலியை, அதாவது இரண்டு குட்டிகளுடன் இருக்கும் பெண் புலி அவ்னி இப்போது அபாயகரமான நிலையில் இருக்கிறது.
வெட்கப்படுகிறேன்
மஹாராஷ்டிரா அரசையும், வனத்துறையையும் நினைத்து வெட்கப்படுகிறேன். அவர்களுடையே தவறை மறைப்பதற்காக, ஒரு புலியை பலியாடு ஆக்குவதா" என கொந்தளித்திருக்கிறார் நடிகை சதா.
|
ரசிகர்கள் வரவேற்பு
நடிகை சதாவின் இந்த அக்கறைக்கு அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இத்தனை நாட்கள் டிவிட்டர் கணக்கு தொடங்காமல் இருந்த சதா, தற்போது பெண் புலிக்காக கணக்கு தொடங்கியிருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர்.