Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஐயையோ... உங்ககிட்ட சம்பளம் வாங்கமாட்டேன்... அடம் பிடித்த ஹீரோயின், அசந்து போன இயக்குனர்!
Recommended Video
சென்னை: இயக்குனரிடம் சம்பளம் வாங்க மாட்டேன் என்று நடிகை தன்ஷிகா மறுத்துள்ள தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில், தேசிய விருது பெற்ற இயற்கை, ஜீவா நடித்த ஈ, ஜெயம் ரவி நடித்த பேராண்மை, ஆர்யா, விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு படங்களை இயக்கியவர் ஜனநாதன்.
இவர் இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை அருகே செட் அமைத்து நடந்து வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தில் நடிக்க, சம்பளம் வேண்டாம் என்று நடிகை சாய் தன்ஷிகா மறுத்துள்ளார். தன்ஷிகாவை, பேராண்மை படத்தில் நான்கு ஹீரோயின்களுள் ஒருவராக அறிமுகப் படுத்தியவர், இயக்குனர் ஜனநாதன். அந்த நன்றியின் அடிப்படையில் சாய் தன்ஷிகா இப்படி கூறியுள்ளார்.
ஒருவழியா சதீஷுக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு.. ஆமா இது காதல் திருமணமா? பெரியோரால் நிச்சயிக்கப்பட்டதா?
இதுபற்றி படக்குழு கூறும்போது, இந்தப் படத்தில் தன்ஷிகா மாடர்னான கேரக்டரில் நடிக்கிறார். முக்கியமான ரோல் அவருக்கு. இயக்குனர் ஷூட்டிங்கிற்கு அழைத்தபோது மறுவார்த்தை பேசாமல், உடனடியாகக் கிளம்பி வந்தார். தன்னை அறிமுகப்படுத்தியவர் இயக்கும் படம் என்பதால் அந்த மரியாதையின் காரணமாக, அவர் சம்பளம் வேண்டாம் என்று மறுத்துள்ளார். இதனால் இயக்குனர் நெகிழ்ந்து போனார். ஆனாலும் கணிசமானத் தொகையை அவருக்கு ஊதியமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.