Don't Miss!
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
திருச்சிக்கு தேர்வு எழுத வந்த 'மலர் டீச்சர்'.. செல்பி எடுத்த ரசிகர்கள்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: திருச்சி தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியுடன் ரசிகர்கள் திணற திணற செல்பி எடுத்து தீர்த்துள்ளனர்.
Recommended Video
கஸ்தூரி மான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தவர் சாய் பல்லவி. பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சராக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
'கே.ஜி.எஃப்' ஹீரோ யஷ் மகனுக்கு பெயர் சூட்டியாச்சு.. இதுதான் பெயர்.. என்ன அர்த்தம்னு பாருங்க!
ரப்பர் போல்
மாரி 2 படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. இந்தப் படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு சாய் பல்லவி போட்ட ஆட்டம் பெரும் வைரலானது. உடம்பை ரப்பர் போல் வளைத்து சர்வ சாதாரணமாக ஆடி பட்டையை கிளப்பினார்.
கடைசியாக என்ஜிகே
தனுஷ் ஆடிய போதும் அனைவரின் கண்களும் இன்றும் சாய் பல்லவியை மட்டும் தான் பார்த்தது என்பதை மறுக்க முடியாது. தமிழில் கடைசியாக என்ஜிகே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி, விராட்ட பர்வம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
திருச்சியில் தேர்வு
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி முகத்தில் மாஸ்க்குடன் இருக்கும் போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை சாய் பல்லவி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அவர் தேர்வு எழுத சென்றதாக கூறப்படுகிறது.
வைரலாகும் செல்பி
அப்போது சக தேர்வர்கள் அவருடன் ஆசைத் தீர செல்பி எடுத்துள்ளனர். மாஸ்க்கை இறக்கிவிட்டு தன்னுடன் செல்பி எடுத்தவர்களுக்கு சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்துள்ளார் நடிகை சாய் பல்லவி. அந்த செல்பிக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மருத்துவ படிப்பு
சாய் பல்லவி 2016ஆம் ஆண்டு தனது மருத்துவ படிப்பை முடித்தார். ஆனால் அவர் பிராக்டிஷனராக ரிஜிஸ்டர் செய்யவில்லை என தெரிகிறது. இதற்கான தேர்வை எழுத சென்ற போதுதான், சக தேர்வர்கள் அவருடன் செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது.