Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
திருச்சிக்கு தேர்வு எழுத வந்த 'மலர் டீச்சர்'.. செல்பி எடுத்த ரசிகர்கள்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: திருச்சி தனியார் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவியுடன் ரசிகர்கள் திணற திணற செல்பி எடுத்து தீர்த்துள்ளனர்.
Recommended Video
கஸ்தூரி மான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்தவர் சாய் பல்லவி. பிரேமம் என்ற மலையாள படத்தில் மலர் டீச்சராக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
'கே.ஜி.எஃப்' ஹீரோ யஷ் மகனுக்கு பெயர் சூட்டியாச்சு.. இதுதான் பெயர்.. என்ன அர்த்தம்னு பாருங்க!
ரப்பர் போல்
மாரி 2 படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. இந்தப் படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு சாய் பல்லவி போட்ட ஆட்டம் பெரும் வைரலானது. உடம்பை ரப்பர் போல் வளைத்து சர்வ சாதாரணமாக ஆடி பட்டையை கிளப்பினார்.
கடைசியாக என்ஜிகே
தனுஷ் ஆடிய போதும் அனைவரின் கண்களும் இன்றும் சாய் பல்லவியை மட்டும் தான் பார்த்தது என்பதை மறுக்க முடியாது. தமிழில் கடைசியாக என்ஜிகே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி, விராட்ட பர்வம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
திருச்சியில் தேர்வு
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி முகத்தில் மாஸ்க்குடன் இருக்கும் போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை சாய் பல்லவி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அவர் தேர்வு எழுத சென்றதாக கூறப்படுகிறது.
வைரலாகும் செல்பி
அப்போது சக தேர்வர்கள் அவருடன் ஆசைத் தீர செல்பி எடுத்துள்ளனர். மாஸ்க்கை இறக்கிவிட்டு தன்னுடன் செல்பி எடுத்தவர்களுக்கு சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்துள்ளார் நடிகை சாய் பல்லவி. அந்த செல்பிக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மருத்துவ படிப்பு
சாய் பல்லவி 2016ஆம் ஆண்டு தனது மருத்துவ படிப்பை முடித்தார். ஆனால் அவர் பிராக்டிஷனராக ரிஜிஸ்டர் செய்யவில்லை என தெரிகிறது. இதற்கான தேர்வை எழுத சென்ற போதுதான், சக தேர்வர்கள் அவருடன் செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது.