Don't Miss!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- News பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர்.. அம்பேத்கர் சிலை குண்டு வீச்சு விவகாரத்தில் வன்னி அரசு பரபரப்பு ட்வீட்!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: யாரும் அதைப்பற்றி பேசாமல் இருந்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என வனிதாவின் திருமணம் குறித்து நடிகை சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி தனது காதலாரான பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.
ஆனால் ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் திருமணம் செய்து கொண்டதால் அவரது திருமணம் பெரும் சர்ச்சையானது.
பிரபலங்கள் கேள்வி
அடுத்தவர் கணவரை வனிதா அபகரித்து கொண்டதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் வனிதா ஏமாந்துவிட்டாரா என்றும் கூறி வருகின்றனர். பிரபலங்கள் பலருமே வனிதா எப்படி விவாகரத்து செய்யாத ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார் என கேள்வி எழுப்பினர்.
மனிப்பு கேட்டனர்
ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத வனிதா, தனது திருமணம் குறித்து பேசுபவர்களை எல்லாம் கண்டமேனிக்கு விளாசி வருகிறார். வனிதாவின் வசவுகளை பொறுக்கமுடியாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் அண்மையில் மன்னிப்பு கேட்டனர்.
குழந்தை அல்ல
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற நடிகை சாக்ஷி அகர்வால் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதாவது வனிதா ஒன்றும் இரண்டாவது படிக்கும் பெண் அல்ல ஏமாறுவதற்கு. அவருக்கு எது சரி எது தவறு என்று தெரியும் என தெரிவித்துள்ளார்.
பேசாமல் இருந்தாலே போதும்
என்ன நடந்திருந்தாலும் அது வனிதாவுக்கு தெரிந்துதான் நடந்திருக்கும். இது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி சமூக வலைதளங்களில் பேசாமல் இருந்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும். வனிதா பல விஷயங்களை தாண்டிதான் வந்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
சாக்ஷி தனக்கு ஆதரவாக பேசியதை அறிந்த நடிகை வனிதா அவருக்கு டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார்.