Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
விவாகரத்து குறித்து பேசிய சமந்தா.. பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியில் பங்கேற்பு!
சென்னை : பாலிவுட்டின் சிறப்பான இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தனியார் சேனலில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்த நிலையில், தற்போது 7வது சீசன் வரும் 7ம் தேதி முதல் துவங்கவுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர்கள் குறித்து காணப்படுகிறது.
56 வயதான முரட்டு சிங்கிளுக்கு ஜோடியாகும் சமந்தா.. என்ன படத்தில் தெரியுமா ?
காபி வித் கரண் நிகழ்ச்சி
பாலிவுட்டின் சிறப்பான படங்களை இயக்கிவரும் பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் தனியார் சேனலில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். பாலிவுட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக காணப்படுகிறது.
ஜூலை 7ல் துவக்கம்
கடந்த 6 சீசன்களை முடித்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனை துவங்கவுள்ளது. வரும் 7ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் இப்போதே காத்திருக்கத் துவங்கியுள்ளனர்.
மனம் திறக்கும் பிரபலங்கள்
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது மனம் திறந்து பேசுவது வாடிக்கை. மேலும் நிகழ்ச்சியில் விளையாட்டுக்களும் நடக்கும். கேள்வி பதில்கள் சிறப்பான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரபலங்களிடம் கேட்கப்படும். அவர்கள் அதற்கு சிறப்பான வகையில் பதிலளிப்பதும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.
அதிர்ச்சி கொடுத்த கரண் ஜோகர்
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி இனி தொடராது என்று கரண் ஜோகர் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், தற்போது 7வது சீசன் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 2004ல் துவங்கப்பட்டது. கடந்த 2019ல் இதன் 6வது சீசன் நிறைவடைந்தது.
7வது சீசன்
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசனுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் மிகவும் அட்டகாசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆலியா பட், ரன்பீர் சிங், சாரா அலிகான், ஜான்வி கபூர் என பிரபல பாலிவுட் பிரபலங்கள் இதில் காணப்படுகின்றனர். மேலும் அக்ஷய் குமாருடன் சமந்தாவும் இடம்பெற்றுள்ளார்.
Recommended Video
சமந்தா பங்கேற்பு
கோலிவுட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார் சமந்தா. அவர் தற்போது பாலிவுட்டிலும் தன்னுடைய இருப்பை பதிவு செய்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் அக்ஷயுடன் பங்கேற்றுள்ளார். அவர் மிகவும் செக்சியான உடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும் தன்னுடைய விவாகரத்து குறித்தும் பேசியுள்ளார்.
|
கேஜிஎப் வாழ்க்கை
நாம்தான் நம்முடைய மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கைக்கு காரணம் என்றும் நம்முடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத போதுதான் வாழ்க்கை கடினமானதாக மாறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். நாம் அதிகமான எதிர்பார்ப்பை வாழ்க்கையில் வைத்தால் அது நமக்கு கேஜிஎப் போன்ற வாழ்க்கையை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.