Don't Miss!
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அச்சச்சோ.. கொரோனா இருக்குப்பா.. நான் வரல.. சமந்தாவால் ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு!
சென்னை: கொரோனா பரவல் காரணமாக அச்சமடைந்துள்ள நடிகை சமந்தா படப்பிடிப்புக்கு வர மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
இப்படி ஒரு காலு… அப்படி ஒரு காலு… ஊரடகில் சூப்பரான வொர்க் அவுட் !
தமிழில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
மகேஷ் பாபுவுடன்
தமிழில் தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஷகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.
புதிய படத்தில் ஒப்பந்தம்
திருமணத்திற்கு பிறகுதான் நடிகை சமந்தாவுக்கு மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்க இருந்தது.
நடிக்க மறுத்த சமந்தா
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நடிகை சமந்தா படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் படப்பிடிப்பை படக்குழு ரத்து செய்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.
புதிய உச்சம்
கொரோனா இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாள் தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
முழு ஊரடங்கு
இதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.