Don't Miss!
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்த காரணத்துக்காகத்தான் ஜுனியர் என்டிஆர் படத்தை ரிஜெக்ட் பண்ணாங்களா சமந்தா? போங்கால்ல இருக்கு!
ஐதராபாத் : நடிகை சமந்தா இந்திய அளவில் பான் இந்திய நாயகியாக மாறியுள்ளார்.
Recommended Video
இவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 என்ற தொடர் இவருக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.
இதனால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் இவருக்கு படங்கள் கமிட்டாகி வருகிறது.
சமந்தா மிகுந்த வலிமையானவங்க.. சொன்னது யாரு தெரியுமா.. அவங்களும் பிரபல நடிகைதான்!
நடிகை சமந்தா
நடிகை சமந்தா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதீஜா என்ற கேரக்டர் இவருக்கு சிறப்பாக அமைந்தது.
புஷ்பா படத்தில் ஆட்டம்
முன்னதாக அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா படத்திற்காக ஊ சொல்றியா மாமா என்ற பாடலில் ஆட்டம் போட்டிருந்தார் சமந்தா. இந்தப் படத்தின் வெற்றிக்கு சமந்தாவின் இந்த பாடலும் ஒரு காரணமாக அமைந்தது. இவரது விவாகரத்து முடிவு அறிவிக்கப்பட்ட நேரத்தில் உடனடியாக இந்தப் பாடலில் நடித்திருந்தார் சமந்தா.
அடுத்தடுத்த படங்கள்
அடுத்ததாக இவரது நடிப்பில் யசோதா, குஷி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் யசோதா பெண்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. இந்தப் படத்தின் முழு சூட்டிங்கும் காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகளில்அடுத்ததாக இவரது நடிப்பில் யசோதா, குஷி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் யசோதா பெண்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், குஷி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. இந்தப் படத்தின் முழு சூட்டிங்கும் காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. படமாக்கப்பட்டது.
அக்ஷய் குமாருடன் படம்
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சமந்தா. பாலிவுட்டிலும் அக்ஷயுடன் இணைந்து ஒரு படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆட்டம் போட்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஜுனியர் என்டிஆருடன் படம்
இதையடுத்து ஜுனியர் என்டிஆரின் அடுத்தப் படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாகவுள்ள நிலையில், ஜுனியர் என்டிஆர் -சமந்தாவிற்கு இந்திய அளவில் உள்ள கிரேசை மையமாக வைத்து அவர்களை நடிக்க வைத்த இயக்குநர் திட்டமிட்டிருந்தாராம்.
அதிக சம்பளம் கேட்ட சமந்தா
ஆனால் இந்தப் படத்தில் நடிக்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரட்டாலா சிவா, சமந்தாவிற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், சமந்தா 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் ஆனால் இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து படத்தில் நடிக்க சமந்தா மறுத்ஆனால் இந்தப் படத்தில் நடிக்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொரட்டாலா சிவா, சமந்தாவிற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில், சமந்தா 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் ஆனால் இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து படத்தில் நடிக்க சமந்தா மறுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் ஏமாற்றம்
முன்னதாக இந்தப் படத்தில் நடிக்க சமந்தாவிடம் டேட்ஸ் இல்லாத காரணத்தாலும் அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. எது எப்படியோ சமந்தா இந்தப் படத்தில் நடிக்காத நிலையில், அவருடைய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து ஜுனியர் என்டிஆருடன் நடிக்கும் வாய்ப்பு அடுத்ததாக யாருக்கு போகும் என்பது அடுத்த கேள்வியாக உள்ளது.