Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெண் மானபங்கம்: நடிகை சனா கான் நண்பருடன் கைது
மும்பை: பெண்ணை தாக்கி, மானபங்கம் செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகை சனா கான், அவரது ஆண் நண்பர் இஸ்மாயில் கான் ஆகியோரை மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பாலிவுட் நடிகை சனாகான், சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். சனா கானையும், அவரது நண்பர் இஸ்மாயில் கானையும் தொடர்பு படுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி தாள்களில் கட்டுரை வெளியானது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள், இதை ஊடகங்களுக்கு கசியவிட்ட நபர் யார் என்று விசாரித்தனர். அப்போது, பூனம் கண்ணா என்ற பெண் இந்த வேலையை செய்ததாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
பெண் மீது சந்தேகம்
இதனால், அந்த பெண் மீது நடிகை சனாகானுக்கும், அவரது நண்பர் இஸ்மாயில் கானுக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. இந்தநிலையில், கடந்த 21-ந் தேதி அவர்கள் இருவரும் மும்பை அந்தேரியில் உள்ள பிரபல மருத்துவமனை முன்பு பூனம் கண்ணா நின்று கொண்டிருந்ததை பார்த்தனர்.
பெண் மானபங்கம்
உடனடியாக அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இஸ்மாயில் கான், பூனம் கண்ணாவின் கையை பிடித்து முறுக்கியதாகவும், தகாத இடங்களில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
கொலை மிரட்டல்
மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கலக்கம் அடைந்த பூனம் கண்ணா, இது தொடர்பாக அம்போலி போலீசில் புகார் செய்தார்.
நடிகை கைது
புகாரின்பேரில் மும்பை அம்போலி போலீசார் வழக்குபதிவு செய்து, பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நடிகை சனா கானையும், அவரது நண்பர் இஸ்மாயில் கானையும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி மேற்கொண்டுள்ளனர். இருவர் மீதும் பெண்ணை மானபங்கம் செய்தல், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஜாமீனின் விடுதலை
சில மணிநேர விசாரணைக்குப் பின்னர் நேற்றே இருவரும் ஜாமினில் விடுதலை செய்ய்பட்டனர். இதனிடையே நடிகர் ஷகில் கான் அதே அம்போலி போலீஸ் நிலையத்தில் அதே நாளில் ஒரு புகார் அளித்து உள்ளார். அதில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் வைத்து தன்னை இஸ்மாயில் கான் தாக்கியதாக புகார் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!