இதை ஊக்குவிக்க முடியாது.. அடுத்தவர் கணவரை திருமணம் செய்த வனிதாவை எச்சரித்த பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: நடிகை வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரத்தில் நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி அவரை எச்சரிக்கும் வகையில் டிவிட்டியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
6 மாதத்திற்கு முன்பு தனக்கு அறிமுகமான பீட்டர் பால் மீது காதல் கொண்ட வனிதா, அவரை அவசர அவசரமாக திருமணம் செய்தார்.

போலீஸில் புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை விவகாரத்து செய்யாமலேயே தனது கணவர் வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரை தன்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடுப்பான வனிதா
அவருக்கு ஆதரவாக நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, யூட்யூப் பிரபலமான சூர்யா தேவி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் எலிசபெத்துக்கு ஆதரவாக கருத்து தெரவித்தனர். இதனால் கடுப்பான வனிதா அவர்களை கடுமையாக திட்டி தீர்த்தார்.

குடும்பத்தை கெடுத்த வனிதா
மேலும் சூர்யா தேவி மற்றும் ரவீந்திரன் மீது போலீஸிலும் புகார் அளித்தார். சமூக வளைதளங்களில் வனிதா அடுத்தவர் கணவரை அபகரித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஒரு குடும்பத்தையே வனிதா கெடுத்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் விளாசி தள்ளினர்.

நன்றியுடன்..
இந்நிலையில் நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி, நடிகை வனிதாவை எச்சரிக்கும் வகையில் டிவிட்டியுள்ளார். அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது, டியர் வனி மா, நான் ஏமாற்றப்பட்டபோது என்னை ஆதரித்ததற்கு எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.

ஊக்குவிக்க முடியாது
ஆனால் ஒரு மனிதனுக்கு திருமணத்திற்கு வெளியே உறவுகள் இருப்பதையும், மனைவி / தாயின் குணத்தை இழிவுபடுத்துவதையும் நீங்கள் நியாயப்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாங்கள் ஊக்குவிக்க முடியாது! ப்ளீஸ் இந்த போக்கை ஆதரிக்காதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

பலர் பாராட்டு
சனம் ஷெட்டியின் இந்த துணிச்சலான கருத்தை பலரும் பாராட்டியுள்ளனர். நடிகை மதுமிதா சனம் ஷெட்டியின் இந்த கருத்தை லைக் செய்துள்ளார். சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான, தர்ஷனின் முன்னாள் காதலி ஆவார்.


Click it and Unblock the Notifications











