தண்டவாளம், நட்ட நடு ரோடு.. அரே பய்யா.... என்ன இப்படி இறங்கிட்டாங்க.. விழி பிதுங்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: சஞ்சனா நட்ராஜன் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ விழி பிதுங்கி போயுள்ளனர்.
நடிகை சஞ்சனா நட்ராஜன், நெருங்கி வா முத்தாமிடாதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இறுதிச் சுற்று படத்திலும் நடித்தார்.
நோட்டா, 2.o ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் கேம் ஓவர் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தனுஷின் சுறுளி படத்தில் நடித்து வருகிறார்.

எரிச்சலை ஏற்படுத்தி
தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் சஞ்சனா நட்ராஜன். இதனை தொடர்ந்து வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் சஞ்சனா. இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்குக்கு அக்காவாக நடித்துள்ளார் சஞ்சனா நட்ராஜன். அவரது நடிப்பு அந்தப் படத்தில் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக தனது தங்கையின் கையை வேண்டுமென்றே அவர் உடைக்கும் காட்சி எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
குட்டி டிராயர்
இந்நிலையில் சஞ்சனா நட்ராஜன் விதவிதமான தனது போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் தண்டவளத்தில் நின்றபடி அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ மிரட்டலாக உள்ளது. தொடைக்கு மேல் தெரியும்படி குட்டி டிராயரில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் சஞ்சனா நட்ராஜன்.
நட்ட நடு ரோடு
இதேபோல் நட்ட நடு ரோட்டில் நின்றபடியும் போஸ் கொடுத்திருக்கிறார் சஞ்சனா. சுடிதாரில் பக்கா ஹோம்லியாக போஸ் கொடுத்திருக்கிறார். ஒரு பக்கம் துப்பாட்டா அணிந்தும், துப்பட்டாவை கையில் எடுத்தும், தலை முடியை கோதியும் கலக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார். அவரது இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
புயலென்று நினைத்தேன்
சஞ்சனாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் தனுஷின் D40 படம் குறித்த அப்டேட் ஏதும் உள்ளதா என கேட்டுள்ளனர். மேலும் புயலென்று நினைத்தேன் என்னை,
புயல் கட்டும் கயிறாய் வந்தாள்!
மலை என்று நினைத்தேன் என்னை,
மல்லிகையால் மலையை சாய்த்தாள்!
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே... என கவிதை சொல்லியிருக்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











