Don't Miss!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்த நேரத்துல இப்படியா பண்றது.. 100 பேருடன் படப்பிடிப்பு.. பிரபல நடிகையின் படக்குழுவுக்கு அபாராதம்!
சென்னை: பெரும் கூட்டத்தை கூட்டி படப்பிடிப்பு நடத்திய பிரபல நடிகையின் படக்குழுவுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அபாராதம் விதித்துள்ளனர்.
கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. கன்னட படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
விஜய் சேதுபதியின் மலையாள திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா!
தமிழில் அழுக்கன் அழகாகிறான் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தில்லாலங்கடி, கொலைக்காரன், சூது கவ்வும், பீஸா 2 வில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
5 படங்களில்
கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜானி படம் அவரது நடிப்பில் வெளியானது. தற்போது பல்லு படாம பாத்துக்க, பார்ட்டி, பஹீரா. தேவதாஸ் பிரதர்ஸ், அழகிய கண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சஞ்சிதா ஷெட்டி
அழகிய கண்ணே படத்தில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனரான விஜயகுமார் இயக்குகிறார்.
100 பேருடன் படப்பிடிப்பு
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
படக்குழுவுக்கு அபராதம்
மேலும் கிராம மக்களும் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில் பெரும் கூட்டத்தை கூட்டிய படக்குழுவினருக்கு அபராதம் விதித்தனர்.
பெரும் பரபரப்பு
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடத்திய படக் குழுவினருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேற்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தவும் உத்தரவிட்டனர். இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்பட்டது. இதில் இறுதி ஊர்வல காட்சியை பெரும் கூட்டத்தை திரட்டி எடுத்த படக்குழுவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதோடு போலீஸிலும் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.