Don't Miss!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- News இப்போ தும்முனா சரியா இருக்கும்..! எடப்பாடியா? திமுகவா? ஓபிஎஸ் டீமிலிருந்து எஸ்கேப்பாகும் புகழேந்தி?
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்.. சீரியல் ‘சொர்ணாக்கா’ கைது!
நடிகை சங்கீதாபாலன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: வெளிநாட்டுப் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாக பிரபல சீரியல் நடிகை சங்கீதா பாலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், திரைத்துறையில் இருப்பவர்கள் சிலரே பாலியல் தொழில் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே, பாலியல் தொழில் செய்ததாக நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு பிரபல நடிகை இதே புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாணி ராணி உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா பாலன். ராம்கி நடித்த கருப்பு ரோஜாக்கள் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அதற்குப்பின் சில படங்களில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து சீரியலில் நடிக்கத் தொடங்கிய சங்கீதா பாலன், குணச்சித்திர வேடங்களை விட வில்லி வேடங்களிலேயே அதிகமாக நடித்து வருகிறார். சீரியல் ஒன்றில் இவர் நடித்த 'சொர்ணாக்கா' கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தற்பொழுது பிரபல டிவி தொடரான 'வாணி ராணி'யில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் பனையூரின் விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் நடத்திய சோதனையில், அந்த விடுதியில் பாலியல் தொழில் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இது தொடர்பாக நடிகை சங்கீதா பாலன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கீதாவுடன் சேர்ந்து மேலும் பல சின்னத்திரை நடிகைகள் பாலியல் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, சங்கீதாவின் கைதால், விரைவில் அவர்களது பெயரும் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.