Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: 1202 வேட்பாளர்கள்..15.88 கோடி வாக்காளர்கள்;1.67 லட்சம் வாக்குச் சாவடிகள்!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என் ஆயுளும் சேர்ந்து எஸ்பிபி நல்லபடியாக மீண்டு வர வேண்டும்.. உருக வைத்த நடிகை சரோஜா தேவி!
சென்னை: நடிகை சரோஜா தேவி தன்னுடைய ஆயுளும் சேர்ந்து பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் நல்லபடியாக மீண்டு வரவேண்டும் என உருக்கமாக கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்து வருகிறது.
மருத்துவமனையின் அறிக்கைகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எஸ்பி பாலசுப்ரமணியம் எப்படியாவது மீண்டு வந்து விட வேண்டும் என திரைத்துறையினர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
லாக்டவுனிலும் தொடங்கியது ஷூட்டிங்.. 5 மாத இடைவெளிக்கு பின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பிரபல நடிகை!
நேற்று மாலை பிரார்த்தனை
நேற்று தமிழகம் முழுவதும் மாஸ் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று மாலை 6 மணி முதல் 6.5 மணி வரை நடைபெற்ற இந்த கூட்டுப் பிரார்த்தனையில் திரையுலகப் பிரபலங்கள் மட்டுமின்றி ஏராளமான ரசிகர்களும் பங்கேற்றனர்.
சரோஜா தேவி
எஸ்பிபியின் பாடல்களை ஒலிக்கவிட்டு அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தித்தனர். அப்போது பாடகர் எஸ்பிபிக்காக பிரார்த்தனை செய்த மூத்த நடிகையான சரோஜா தேவி தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
வேதனை அடைந்தேன்
அப்போது எஸ்பிபி குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார் சரோஜா தேவி. பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சரியில்லை என்பதை கேள்விப்பட்டு ரொம்ப வேதனை அடைந்தேன். எஸ்பி பாலசுப்ரமணியம் ரொம்ப நல்ல மனிதர்.
தேன் சாப்பிடுவீங்களா?
ஒரு முறை விழா ஒன்றில் அவரை சந்தித்தேன். அப்போது, அவரிம் நீங்கள் தினமும் தேன் சாப்பிடுவீங்களா என்று கேட்டேன். அதற்கு அவர் ஏன் அப்படி கேட்குறீங்க என்றார். நான், உங்கள் குரல் இவ்வளவு இனிமையா இருக்கே என்றேன். உடனே அவர் சிரித்துவிட்டார்.
என் ஆயுளையும் சேர்த்து
மேலும் நீங்களும்தான் அழகா இருக்கீங்க என்று கூறினார். எஸ்பி பாலசுப்ரமணியம் இப்படி இருப்பதை பார்த்து இந்திய நாடே கவலையில் உள்ளது. என் ஆயுளையும் சேர்த்து அவருக்கு கொடுத்து, கடவுள் அவரை மீட்டு கொடுக்க வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன்.
ரொம்ப வருஷம் பாடனும்
அவர் பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டும். இன்னும் பல பாடல்களை ரொம்ப வருஷம் பாடனும் என கூறியுள்ளார். நடிகை சரோஜா தேவியின் இந்தப் பேச்சு எஸ்பிபி ரசிகர்களை உருக வைத்துள்ளது. நடிகை சரோஜா தேவி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என பல நடிகர்களுடன் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.