Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
34 வருஷமாச்சு சினிமாவுக்கு வந்து...ஆனா, இந்தி என்ட்ரி இப்பதான்...இந்த முன்னாள் ஹீரோயின் ஹேப்பி!
சென்னை: சினிமாவுக்கு வந்து 34 வருடத்துக்கு மேல் ஆனாலும் இப்போதுதான் நடிகை சீதா, இந்தி படத்தில் அறிமுகமாகிறார்.
ஆண்பாவம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சீதா. பாண்டியராஜன் நடித்து இயக்கிய இந்தப் படம் 1985 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து வந்தார் சீதா.
புதிய பாதை படத்தில் நடித்தபோது பார்த்திபனுடன் காதலில் விழுந்தார். இருவரும் 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின் சினிமாவில் நடிக்காமல் இருந்தார் சீதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.
இந்நிலையில் 2001 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்ற சீதா, படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இப்போது அவர் இந்தியில் அறிமுகமாகிறார்.
செல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. நெஞ்சம் மறப்பதில்லை படமும் ரிலீசாகுது!
இயக்குனர் சுசிகணேசன், அவர் இயக்கிய திருட்டுப் பயலே 2 படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். இதில், வினீத்குமார் சிங், ஊர்வசி ராட்டெலா, அபிஷேக் ஓபராய் நடிக்கின்றனர். லக்னோ மற்றும் வாரணாசியில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது.
இதில், தமிழில் இயக்குனர் சுசி கணேசன் நடித்த கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். ஹீரோயினின் அம்மாவாக சீதா நடிக்கிறார்.
சீதா, சினிமாவுக்கு வந்து 35 வருடங்களாகிவிட்டாலும் இப்போதுதான் அவர் இந்தி சினிமாவில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.