twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெள்ளம் புகுந்த வீட்டில் இருந்து 'எங்க வீட்டு மாப்பிள்ளை' சீதாலட்சுமி மீட்பு

    By Siva
    |

    திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை சீதாலட்சுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

    கேரளாவில் பெய்த கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 33 அணைகள் திறந்துவிடப்பட்டதால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.

    Actress Seethalakshmi rescued from her home

    இந்த வெள்ளதால் நடிகை சீதாலட்சுமியும் பாதிக்கப்பட்டார். ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி வரை இருந்தவர் தான் இந்த சீதாலட்சுமி.

    ஆர்யா சீதாலட்சுமியை திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்தபோது அவர் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டார். சீதாலட்சுமியின் வீட்டிலும் வெள்ள நீர் புகுந்தது.

    Actress Seethalakshmi rescued from her home

    உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம், யாராவது வந்து காப்பாற்றுங்கள் என்று கூறி சீதாலட்சுமி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு அவர் மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்ககப்பட்டனர்.

    இதையடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டு வெளியிட்டிருந்த வீடியோவை நீக்கிவிட்டார்.

    English summary
    Enga Veetu Mapillai fame Seethalakshmi has been rescued from her flood affected home in Kerala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X