Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெள்ளம் புகுந்த வீட்டில் இருந்து 'எங்க வீட்டு மாப்பிள்ளை' சீதாலட்சுமி மீட்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை சீதாலட்சுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் பெய்த கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநிலத்தில் உள்ள 33 அணைகள் திறந்துவிடப்பட்டதால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.
இந்த வெள்ளதால் நடிகை சீதாலட்சுமியும் பாதிக்கப்பட்டார். ஆர்யாவுக்கு பெண் தேட நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி வரை இருந்தவர் தான் இந்த சீதாலட்சுமி.
ஆர்யா சீதாலட்சுமியை திருமணம் செய்வார் என்று எதிர்பார்த்தபோது அவர் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டார். சீதாலட்சுமியின் வீட்டிலும் வெள்ள நீர் புகுந்தது.
உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறோம், யாராவது வந்து காப்பாற்றுங்கள் என்று கூறி சீதாலட்சுமி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு அவர் மற்றும் அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்ககப்பட்டனர்.
இதையடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் உதவி கேட்டு வெளியிட்டிருந்த வீடியோவை நீக்கிவிட்டார்.