Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அரசியலில் குதித்த கவர்ச்சி நடிகை.. வந்ததுமே இந்த வாங்கு வாங்குறாங்களே!
சென்னை: பிரபல கவர்ச்சி நடிகையான ஷகிலா அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.
மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஷகிலா. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.
காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!
ஏராளமான படங்களில் நடித்துள்ள ஷகிலா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதேபோல் யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
தமிழக காங்கிரஸில் ஷகிலா
அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் ஷகிலா. இந்நிலையில் நடிகை ஷகிலா அரசியலில் குதித்துள்ளார். அதாவது தமிழக காங்கிரஸின் கட்சியில் இணைந்துள்ளார் நடிகை ஷகிலா. அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
பெண்கள் மீதான வன்முறை
இதற்கான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார் ஷகிலா. தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஷகிலா, பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது மனவேதனையைத் தருவதாக கூறினார்.
அதிகாரம் பெற விரும்புகிறேன்
பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறிய ஷகிலா பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். நடிகை என்பதை தாண்டி ஒரு தனி அடையாளம், தனி அதிகாரம் பெற விரும்புகிறேன் என்றார்.
குஷ்பு இடத்தை நிரப்பவா?
மேலும் நல்லது செய்ய வேண்டும் என்றாலும் கூட ஒரு 'பவர்' வேண்டும் என்ற அவர் நிச்சயமாக எனது தேவைக்காக மட்டுமே அரசியலுக்கு வரவில்லை. காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக நான் வந்துள்ளேனா? என்று கேட்கிறார்கள்.
காரணம் இருக்கும்..
நிச்சயமாக இல்லை. குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றார். மேலும் கட்சி அனுமதி கொடுத்தால் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்ற அவர், சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.