நான் அப்பவே சொன்னேன் கேக்கல...ராஜ் குந்த்ரா வழக்கில் வாக்குமூலம் அளித்த ஷெர்லின் சோப்ரா
மும்பை : ஆபாச பட விவகாரம் தொடர்பாக ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவரின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டு, ஜுலை 28 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆபாச படம் எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் ராஜ் குந்த்ராவிற்கு எதிராக நடிகைகள் பலர் தைரியமாக முன் வந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ராஜ் குந்த்ரா தன்னிடமும் தவறாக நடந்து கொண்டதாக ஷெர்லின் சோப்ரா குற்றம்சாட்டி உள்ளார்.

வாக்குமூலம் அளித்த ஷெர்லின்
ஆபாச பட விவகாரம் தொடர்பாக மும்பை கிரைம் பிராஞ்சில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார் ஷெர்லின். இவர் 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதமே ராஜ் குந்த்ரா மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அப்போதே ராஜ் குந்த்ரா மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிற்கு அழைத்த ராஜ் குந்த்ரா
2019 ல் ஷெர்லி தனது புகாரில், பிசினஸ் விஷயம் பேச வேண்டும் என மேனேஜர் மூலம் ராஜ் குந்ரா தகவல் அனுப்பினார். அந்த பேச்சுக்குப் பிறகு அவர் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் எனது வீட்டுக்கு வந்தார். வந்தவர் என்னை அனுமதி இல்லாமல் முத்தமிட்டார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை.

மனஅழுத்தத்தில் இருந்தாரா குந்த்ரா
அவருடன் தனிப்பட்ட முறையிலும், பிஸினஸ் ரீதியிகாவும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறினேன். அவற்கு அவர், தனக்கும் தன் மனைவி ஷில்பா ஷெட்டிக்குமான உறவு நன்றாக இல்லை எனவும், வீட்டில் தான் மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் கூறினார்.

தள்ளிவிட்டு ஓடி வந்துட்டேன்
நான் தடுத்தும் கூட தொடர்ந்து முத்தமிட முயன்றார். இதையடுத்து எனக்கு பயமாக உள்ளது. இதெல்லாம் வேண்டாம் எனக் கூறினேன். ஆனால் அவர் கேட்காததால், அவரை தள்ளி விட்டு விட்டு நான் பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டேன். அவர் போன பிறகுதான் வெளியே வந்தேன் என கூறி இருந்தார் ஷெர்லின்.

கைது செய்யப்பட்ட குந்த்ரா
ஜுலை 19 ம் தேதி ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











