Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ... நர்ஸாக மாறிய இளம் ஹீரோயின்... வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்!
மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, மருத்துவமனையில் நர்சாக இணைந்துள்ளார், நடிகை ஒருவர்.
Recommended Video
இந்தியில் காஞ்ச்லி லைஃப் இன் எ ஸ்லாஹ் (Kaanchli Life in a Slough) என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஷிகா மல்கோத்ரா.
இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக நடித்திருந்தார். தெடிப்பியா ஜோஷி இயக்கி இருந்த இந்தப் படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.
நர்ஸ் ஆனார்
இந்நிலையில் நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். சீனாவின் உஹானில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அமெரிக்காவிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டுப்படுத்தும் நடவடிக்கை
கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் இங்கிலாந்திலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நர்சிங்கில் பட்டப்படிப்பு
பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருத்துவச் சேவையில், தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என்று அரசு சமீத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து, நடிகை ஷிகா, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வ நர்ஸாக நேற்று இணைந்துள்ளார். இவர், நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
சேவை செய்கிறேன்
நடிகையாகி விட்டதால், நர்ஸாக பணியாற்றாமல் இருந்தார். இப்போது இணைந்துள்ளார். நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு நடிகையாகவும் நர்ஸாகவும் சேவையாற்றத் தயாராக இருக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை. வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள், அரசுக்கு உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார். இவரது அம்மாவும் நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.