Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ... நர்ஸாக மாறிய இளம் ஹீரோயின்... வாழ்த்தி வரவேற்கும் ஃபேன்ஸ்!
மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, மருத்துவமனையில் நர்சாக இணைந்துள்ளார், நடிகை ஒருவர்.
Recommended Video
இந்தியில் காஞ்ச்லி லைஃப் இன் எ ஸ்லாஹ் (Kaanchli Life in a Slough) என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஷிகா மல்கோத்ரா.
இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக நடித்திருந்தார். தெடிப்பியா ஜோஷி இயக்கி இருந்த இந்தப் படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.
நர்ஸ் ஆனார்
இந்நிலையில் நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். சீனாவின் உஹானில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அமெரிக்காவிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டுப்படுத்தும் நடவடிக்கை
கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் இங்கிலாந்திலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நர்சிங்கில் பட்டப்படிப்பு
பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருத்துவச் சேவையில், தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என்று அரசு சமீத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து, நடிகை ஷிகா, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வ நர்ஸாக நேற்று இணைந்துள்ளார். இவர், நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
சேவை செய்கிறேன்
நடிகையாகி விட்டதால், நர்ஸாக பணியாற்றாமல் இருந்தார். இப்போது இணைந்துள்ளார். நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு நடிகையாகவும் நர்ஸாகவும் சேவையாற்றத் தயாராக இருக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை. வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள், அரசுக்கு உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார். இவரது அம்மாவும் நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.