Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் விஜய் பட நடிகை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
மும்பை: விஜய் படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை 12ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.
ஷில்பா ஷெட்டி 1993ஆம் பாஸிகர் படத்தின் மூலம் இந்தியில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ஷில்பா ஷெட்டி.
தமிழில் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்திருக்கிறார். பின்னர் குஷி படத்தில் மேக்கோரினா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதன் மூலம் தமிழில் பிரபலமானார் ஷில்பா ஷெட்டி.
உதவி இயக்குநர்களுக்கு 5 ரூபாய்க்கு டீ காபி வழங்கும் தமிழ் ஸ்டுடியோ
இன வெறி
இதனைத்தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார் ஷில்பா ஷெட்டி. பிரிட்டன் தொலைக்காட்சி நடத்திய பிக்பிரதர்ஸ் நிகழ்ச்சியின் மூலம் இன வெறிக்கு ஆளாகி பெரும் பிரபலமானார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
இதைத்தொடர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஐபிஎல் போட்டியில் கவனம் செலுத்தி வரும் ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார்.
நகைச்சுவை படம்
கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கார் ஷில்பா ஷெட்டி. இந்நிலையில் இந்தியில் உருவாகும் நகைச்சுவை படம் ஒன்றில் நடிகை ஷில்பா ஷெட்டி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி
படத்தின் கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.