Don't Miss!
- News எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஆபாச படங்கள் தயாரித்து வெளியீடு.. நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது.. பரபரப்பு!
மும்பை: ஆபாச பட வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் பிரபுதேவா உடன் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்திலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார்.
'தர்பார்' நடிகர் சுனில் ஷெட்டி வீட்டிற்கு சீல் வைத்த மும்பை மாநகராட்சி.. பரபரப்பு தகவல்!
கணவர் திடீர் கைது
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருந்தார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கைது
சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து, அதனை விநியோகம் செய்ததாக கடந்த பிப்ரவரி மாதம் ராஜ் குந்த்ரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், நடிகை ராஜ்குந்த்ரா நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
முக்கிய குற்றவாளி
இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில், ஆபாச படங்களை தயாரித்து, விநியோகம் செய்ததாக கடந்த பிப்ரவரி மாதம் தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு பின்னர் ராஜ்குந்த்ரா நேற்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவர் முக்கிய குற்றவாளியாக உள்ளது தெரியவருகிறது. .
தேவையான ஆதாரங்கள்
அவருக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ராஜ் குந்த்ரா மீது மோசடி, பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது மற்றும் ஆபாசமான புத்தகங்கள் அல்லது இலக்கியங்களை பகிரங்கமாக காட்சிப்படுத்துதல் அல்லது பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஜாமின் கேட்டு மனுத்தாக்கல்
ஆனால், இதனை மறுத்துள்ள ராஜ்குந்த்ரா, ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனிடையே #RajKundraArrest என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலரும் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி பிரபலங்களுடன் உள்ள போட்டோக்களை ஷேர் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.
பூனம் பாண்டே வழக்கு
முன்னதாக ராஜ் குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பூனம் பாண்டே மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாடல் மற்றும் நடிகையான பூனம் பாண்டே ராஜ் குந்த்ரா மற்றும் அவரது அசோசியேட்ஸ் தன்னுடனான ஒப்பந்தம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தனது கன்டென்ட்டை பயன்படுத்தி வருவதாக வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!