லாக்டவுனுக்கு முடிவே இல்லையா… பிரபல நடிகை புலம்பல் !
மும்பை : மாடல் அழகியான ஷ்ரத்தா தாஸ், எப்போ இந்த லாக்டவுன் முடியும் வீட்டுல இருக்க முடியல என்று நகைச்சுவையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகையாக தனது பயணத்தை தொடங்கினார் ஷ்ரத்தா தாஸ்.
தற்போது இவர், கன்னடம், இந்தி, மலையாளம்,பெங்காலி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் அறிமுகம்
சித்து ஃபிரம் சிககுளம் திரைப்படத்தின் வாயிலாக திரைத்துறையில் நுழைந்தார் ஷ்ரத்தா தாஸ். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

பல படங்களில்
மேலும், லஹோர் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார் ஷ்ரத்தா தாஸ். தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் பெங்காலி திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார் ஷ்ரத்தா.

ஏகப்பட்ட லைக்குகள்
படங்களில் மட்டுமல்ல இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்த கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் இவர் பதிவிட்ட பிகினி புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை பெற்று மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது.
லாக்டவுனுக்கு முடிவே இல்லையா
தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊரடங்கு நேரத்தில் தூங்கி எழுவதே வேலையாக இருக்கு என்று நகைச்சுவையான வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், லாக்டவுனுக்கு முடிவே இல்லையா, நண்பர்களை பார்த்து 52 நாள் ஆச்சு, நண்பர்களை பார்க்க மிகவும் ஆர்வாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











