Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வீட்டு வேலைக்காரி மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்: நடிகை சுருதி
பெங்களூர்: தனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறிய வீட்டு வேலைக்காரப் பெண் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக" என்று பிரபல கன்னட நடிகை சுருதி கூறியுள்ளார்.
பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுருதி, "எனது வீட்டில் வீட்டு வேலைகள் செய்து வந்த ஷோபா என்பவர், எனக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டார். பொய் குற்றச்சாட்டுகளை கூறி எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தினார் என்று கூறினார்.
மூன்றாவது நபர்
ஷோபாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தவறான தகவல்களை வெளியிட்டதை அவர் ஒப்புக்கொண்டார். அவரது பின்னணியில் மூன்றாவது நபர் இருந்து செயல்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனக்கு எதிராக சதி
எனக்கு எதிராக சதி திட்டம் தீட்டப்படுவதாக ஏற்கனவே நான் சொன்னேன். அது தற்போது உண்மையாகியுள்ளது. விவாகரத்து பெற்ற எனது கணவர் சந்திரசூட் வேலைக்காரியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.
முன்னாள் கணவருக்குத் தொடர்பு
எனது ஒவ்வொரு நடவடிக்கை பற்றியும் எனது முன்னாள் கணவருக்கு வேலைக்காரி தகவல் கொடுத்துள்ளார். வேலைக்காரி ஷோபா மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.
நீதி கிடைக்க வேண்டும்
இதுகுறித்து நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்கிறேன். எனக்கு ஏற்பட்டுள்ள அநியாயத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுத்துள்ளேன் என்று நடிகை ஸ்ருதி கூறியுள்ளார்.