Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கனத்த இதயத்தோடு விடை தருகிறோம்.. எஸ்பி ஜனநாதன் மறைவு.. நடிகை ஸ்ருதி ஹாசன் உருக்கம்!
சென்னை: எஸ்பி ஜனநாதன் மறைவு குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Recommended Video
இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்பி ஜனநாதன் நேற்று காலமானார்.
கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மயிலாப்பூர் வீட்டில் அஞ்சலி
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று எஸ்பி ஜனநாதன் மருத்துவமனையில் உயிரிழந்தார். எஸ்பி ஜனநாதனின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கடைசியாக லாபம்
அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். எஸ்பி ஜனநாதன் கடைசியாக விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து லாபம் படத்தை இயக்கினார்.
ஸ்ருதி ஹாசன் உருக்கம்
அந்தப் படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் எஸ்பி ஜனநாதன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் எஸ்பி ஜனநாதனின் மறைவு குறித்து லாபம் படத்தின் ஹீரோயினான ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஒரு புரட்சி போல..
அவர் பதிவிட்டிருப்பதாவது, "கனத்த இதயத்தோடு எஸ்.பி.ஜனநாதன் சாருக்கு விடை தருகிறோம். உங்களைப் பற்றி அறிந்துக் கொண்டதும் உங்களுடன் பணியாற்றியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! ஒவ்வொரு நாளும் ஒரு புரட்சி போல உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள்.
எண்ணங்களில் இருப்பீர்கள்
நீங்கள் ஊக்கமளிப்பவராகவும், அன்பானவராகவும் இருந்தீர்கள். அனைத்திற்கும் நன்றி. நீங்கள் எப்போதும் என் எண்ணங்களில் இருப்பீர்கள். அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.