Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
“தமிழகத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியாதா?”.. ஸ்ருதியின் ’ஹேப்பி’ பதிவால் ரசிகர்கள் கோபம்!
நடிகை ஸ்ருதி ஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு அரசு விழாக்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன், நேற்றிரவு 11.30 மணியளவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், 'இரண்டு நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுடன் வேலை பார்ப்பது மிகவும் ஜாலியாக இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார். ஸ்ருதியின் இந்தப் பதிவைப் பார்த்து அவரது ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
'தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், இப்படி ஒரு பதிவு வெளியிடலாமா?' என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமூகவலைதளங்கள் முழுவதையும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுச் செய்திகளே ஆக்கிரமித்துள்ள நிலையில், ஸ்ருதிக்கு மட்டும் இது எப்படி தெரியாமல் போனது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தப் பதிவினால் ஸ்ருதி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ஸ்ருதி வெளியிட்ட இந்தப் பதிவை இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!