Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போன டிசம்பர்ல கல்யாணம், இந்த டிசம்பர்ல டைவர்ஸ்... அறிவித்தார் ஸ்வேதா
மும்பை: நடிகை ஸ்வேதா பாசு, தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.
தமிழில், உதயா நடித்த ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், கருணாஸ் நடித்த சந்தமாமா உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு பிரசாத். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தேசிய விருதும் பெற்றுள்ளார்.
இவரும் இவரது நீண்ட நாள் நண்பரான இந்திப் பட இயக்குனர் ரோகித் மிட்டலும் காதலித்து வந்தனர். கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.இவர்கள் திருமணம் செய்துகொள்ள இயக்குனர் அனுராக் காஷ்யப்தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
இயேசுதான் என்னை காப்பாற்றினார்.. திடீரென கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய பிரபல நடிகர்!
இந்நிலையில், தனது திருமணத்தை முறித்துக்கொண்டதாக ஸ்வேதா பாசு பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர், பல மாத யோசனைக்குப் பிறகு இந்த முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். இம்முடிவை இருவரும் சேர்ந்தே எடுத்துள்ளோம். எல்லா புத்தகங்களையும் அட்டை டூ அட்டை படித்துவிட முடியாது. அதற்கு புத்தகம் மோசமாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. ஈடுசெய்ய முடியாத சில நினைவுகளுக்கும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி ரோகித். இனிமையான வாழ்க்கை உன் முன் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஸ்வேதா.
ஐதராபாத்தில் பாலியல் தொழில் செய்ததாகக் கைது செய்யப்பட்டவர், ஸ்வேதா பாசு என்பது குறிப்பிடத்தக்கது.