லாக்டவுன்ல என்னதான் பண்றதுன்னு யாருக்குமே புரியல... சிம்ரன் செஞ்ச வேலையை பாருங்க
மும்பை : நாடெங்கிலும் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திரைத்துறையினரும் இதற்கு விதிவிலக்கில்லை.
இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது லாக்டவுன் பொழுதை செல்பிக்களுடன் கழித்துள்ளார்.

தொடர் ஹிட்டான படங்கள்
90களின் கனவுக்கன்னியாக வலம்வந்தவர் நடிகை சிம்ரன். எந்த முன்னணி நடிகராக இருந்தாலும் சிம்ரனைத்தான் புக் செய்ய வேண்டும் என்று அடம்பிடித்து அவரை ஹீரோயினாக்கிய நிகழ்வுகளும் அப்போது இருந்தது. அதற்கேற்றாற்போல அவர் நடித்த அனைத்து படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

ஹிட்டடித்த ஜோடி
நடிப்பு, நடனம் இரண்டிலும் அவர் பட்டையை கிளப்பினார். குறிப்பாக விஜய் -சிம்ரன் ஜோடி நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன. அஜித்துடன் அவர் இணைந்து நடித்த வாலி படம் தற்போதும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
Recommended Video

முதல்முறையாக ரஜினியுடன் ஜோடி
இந்நிலையில் தற்போதும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சிம்ரன். சமீபத்தில் ரஜினியுடனும் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்த நடிப்பும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லாக்டவுனால் வீட்டில் முடங்கியுள்ளார் சிம்ரன். என்ன செய்வது என்று மற்றவர்களை போலவே அவருக்கும் தெரியவில்லை.

வெளியிட்ட சிம்ரன்
இதையடுத்து தற்போது லாக்டவுன் செல்பீசை எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிம்ரன். அந்த புகைப்படங்களில் மிகவும் சிறப்பாகவே உள்ளார். அவர் தன்னுடைய பிட்னசுக்காக மெனக்கெடுவது இந்த புகைப்படங்களில் தெரிகிறது. என்ன ஒன்று மேக்கப் தான் கொஞ்சம் அதிகம்.


Click it and Unblock the Notifications











