Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு!
சென்னை: நடிகர் அஜித் உதவி செய்ததாக வெளியான தகவல் அனைத்துத் பொய் என பிரபல நடிகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக தடைபட்டுள்ள இந்தப் படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம்.. எஸ்பிபிக்காக உருகிய எஸ்கே!
தெரியாமல் உதவி
தமிழகம் முழுக்க ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் அஜித், பலருக்கும் தெரியாமல் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதனை பல பிரபலங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
விளம்பரம் இல்லாமல்
அண்மையில் கூட பிரபல நடிகரான பொன்னம்பலம், தனது நண்பரின் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு நடிகர் அஜித் எப்படி உதவினார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசினார். இது போல் பலருக்கும் எந்த விளம்பரமும் இல்லாமல் அஜித் சைலன்ட்டாக உதவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அங்காடித் தெரு சிந்து
இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து நடிகை ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்காடித் தெரு படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிந்துதான் அவர். அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்கு உதவிக்கோரியும் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதெல்லாம் பொய்
அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிந்து, ரேணி குண்டா படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசனுக்கு முதலில் உதவி செய்தது நான்தான் என்று கூறியுள்ளார். மேலும் அஜித் உதவி செய்தார் என பரப்பப்படும் தகவல் எல்லாம் சுத்தப் பொய் என்றும் கூறியிருக்கிறார் சிந்து.
கடுப்பான ரசிகர்
அதோடு அஜித் பலருக்கும் உதவி செய்து வருகிறார் என பரவும் தகவலிலும் உண்மையில்லை என்று கூறியுள்ளார். நடிகை சிந்துவின் இந்த பேச்சு அஜித்தின் ரசிகர்கள் கடுப்பாக்கியிருக்கிறது. அண்மையில் தன்னைப் பற்றியும் தனது மகளைப் பற்றியும் தவறான தகவல் பரபரப்ப படுவதாக கூறி பேட்டி ஒன்றில் கதறினார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.