Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
’நான் சிங்கிள்தான்..’ இன்னும் திருமணம் செய்துகொள்ளாத முன்னாள் ஹீரோயின்.. சொல்ற காரணத்தைப் பாருங்க!
சென்னை: தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார், முன்னாள் ஹீரோயின்.
சினிமாவில் ஏழு, எட்டு வருடங்கள் நிலைத்து நிற்கும் நடிகைகள், பிறகு யாராவது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடுவார்கள்.
இப்படித்தான் பல நடிகைகள் செய்துள்ளனர். இல்லை என்றால் உடன் நடிக்கும் நடிகரையோ, இயக்குனரையோ காதலித்து திருமணம் செய்துகொள்வதும் உண்டு.
என்னம்மா கோலம் இது.. வெறும் டிஷர்ட்டுடன் போஸ் கொடுத்த நடிகை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
புதுப் புது அர்த்தங்கள்
ஆனால், கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமலே இருக்கும் நடிகைகள், ஒரு சிலர்தான். அதில் ஒருவராக இருக்கிறார் இந்த நடிகை. கே.பாலசந்தர் இயக்கிய 'புதுப் புது அர்த்தங்கள்' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள நடிகை, சித்தாரா. இந்தப் படம் ஹிட்டானதால், அவருக்கு அதிக புகழ் கிடைத்தது. தமிழில் முதல் படமே ஹிட்டானதை அடுத்து வாய்ப்புகள் குவிந்தன.
கன்னடம், தெலுங்கு
இதைத் தொடர்ந்து விக்ரமன் இயக்கிய புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர், காவல் கீதம், என்றும் அன்புடன், ரஜினியின் படையப்பா உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். இந்தப் படங்களும் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. மலையாளம், தமிழ் தவிர, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
அம்மா, அண்ணி
இப்போது வயதாகிவிட்டாலும் தொடர்ந்து, அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார், சித்தாரா. தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். சீனியர் நடிகையாகிவிட்ட சித்தாரா, மற்ற நடிகைகளை போல திருமணமாகி செட்டிலாகி இருப்பார் என்றுதான் ரசிகர்கள் நினைத்திருப்பார்கள்.
திருமணம் வேண்டாம்
ஆனால், தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருக் கிறார் அவர். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் வேண்டாம் என்ற முடிவை நான்தான் எடுத்தேன். அதற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன். அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த முக்கிய நபர் என் தந்தை. அவர் இறந்த பிறகு, திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.
Recommended Video
யாருக்கும் தெரியாது
47 வயதான சித்தாரா இப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துகொள்வாரா என்று கேட்டதற்கு, அப்படி ஒரு எண்ணமே தனக்கு இல்லை என்று மறுத்துள்ளார். கூடவே, வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உண்மைதான் வாழ்க்கையில் என்ன வேணாலும் நடக்கும்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?